கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடொன்றுக்குச் செல்ல முயன்ற 65 பேர் திருகோணமலையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 63 பேர் ஆண்கள், ஒரு பெண், நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நியூஸிலாந்து செல்லும் நோக்கத்துடன் திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.