வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் மற்றும் அங்கு பணிபுரியும் 2 உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் இன்றையதினம் சுகாதார பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.