உக்ரைன் ரஷ்ய போர் 100 நாட்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்ய படைகள் பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு உக்ரைனின் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மேலும் 16 பேர் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.