தென்கொரியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 2,65,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா மற்றும் ஓமிக்ரோன் புதிய திரிபு பரவி வருகிறது.
இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலையாக உருவாகியுள்ளது.
இச்சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வாரத்தில் அங்கு நாளாந்தம் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வந்தது.
இந்நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 995 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1.42 கோடியை தாண்டியது.
அதன்படி அங்கு இதுவரையில் 1 கோடியே 42 லட்சத்து 67 ஆயிரத்து 401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 209 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 17 ஆயிரத்து 662 ஆக அதிகரித்தது.