ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாளைக்கு முன் இந்திய மணமகனை உக்ரைன் மணப்பெண் திருமணம் செய்துள்ளார்.
அவர்களது திருமண வரவேற்பு நிகழ்வு இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
உக்ரைனை சேர்ந்த லியுபோவ் என்ற பெண், இந்தியாவை சேர்ந்த அவரது நண்பர் பிரதீக் என்பவரை உக்ரைனில் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனில் போர் தொடங்கிய மறுநாள், மணமகனின் குடும்பத்தாரால் இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் நடத்தப்பட்ட அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமண தம்பதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் இந்த கடினமான சூழலில் நடைபெற்றுள்ளது.
நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.