இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இன்றிரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகள் வழங்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய சேவையாளர்கள், ஆடைத் தொழிற்சாலைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சேவைகள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியுமெனவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.