
இலங்கையில் பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அதில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.