ரொறன்ரோவில் பஸ் ஒன்றில் இருந்த பெண் மீது மர்ம நபர் ஒருவர் தீ வைத்து பெரும் பரபரப்பான சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கிப்லிங் மற்றும் இஸ்லிங்கடன் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான பஸ் ஒன்றில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பஸ் ரீ.ரீ.சீ போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமானதாகும்.
நபர் ஒருவர், பெண் மீது திரவமொன்றை ஊற்றி தீ மூட்டியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.
அவர் தறிபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 35 வயதான ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.