இலங்கையில் யாழ்ப்பாணம், அரியாலை – நாவலடி பிரதேசத்தை சேர்ந்த 24 வயது தாயினால் 9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் காலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தையை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
குறித்த பெண் மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.