இந்தியாவில் கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஷியாம் பிரசாத்.
இவருக்கும் சுவாதி என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புதுமண தம்பதியான ஷியாம் பிரசாத் அவரது மனைவி சுவாதி மற்றும் குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு காரில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சிட்கோ பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லொறி மற்றும் கார் எதிர்பாராதவிதமாக் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் சுக்கு சுக்காக நொறுங்கி அதன் இடிபாடுகளுக்குள் காரில் இருந்த 4 பேரும் சிக்கி கொண்டனர்.
அப்போது புதுமாப்பிள்ளையான ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ், பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாய் மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த மாமனார் சவுடையன் மற்றும் அவரது மருமகள் சுவாதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.