பிரித்தானியாவில் நேற்று 6 ஆம் திகதி புதன்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்தார்.
உலகமெங்கும் இருக்கும் LGBT-களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டு வந்த முதன்மை மாநாட்டை பிரித்தானியா கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உயிரியல் ஆண்கள், பெண்கள் விளையாடும் போட்டிகளில் பங்கேற்பதை நான் முறையானதாக கருதவில்லை.
இது மிகவும் சர்ச்சைக்குரியவை.
ஆனால் இத்தைகைய நடைமுறை எனக்கு வினோதமாக தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் அல்லது உடை மாற்றும் அறைகள் போன்றவை பெண்களுக்கென பிரத்யேகமானது.
இது என்னை சிலருடன் முரண்பட வைக்கலாம் ஆனால் நான் பாலினத்தை மாற்றவும், மாற்ற விருப்பும் நபர்களிடமும் நான் மிகவும் அனுதாபம் காட்டவில்லை என அர்த்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விளையாட்டுகளில் உள்ளடக்கத்தை சமநிலைப்படுத்தவும்,
நியாமற்ற நன்மைகள் விளையாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் போது திருநங்கைகளின் உரிமைகள் பரபரப்பாக பேசப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் பிரித்தானியாவின் தேசிய ஆம்னியம் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து திருநங்கை எமிலி பிரிட்ஜஸ் நீக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் பிரித்தானியாவில் நடைபெற்ற மற்றொரு சைக்கிள் போட்டியில் திருநங்கைகள் மற்றும் இருமை அல்லாத பங்கேற்ப்பு கொள்ளகையின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
