பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல்நிலை குறித்து வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக நேற்று பிற்பகல் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதுகுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மதியம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பிரதமர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.