ஜேர்மனியில் இளம்பெண் ஒருவர் தன் வீட்டின் அருகிலேயே பண்ணை ஒன்றை வைத்து 110 பாம்புகளை வளர்த்துவந்துள்ளார்.
குறித்த 35 வயதுடைய பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை, சால்ஸ்கிட்டர் என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சென்று தன்னை பாம்பு ஒன்று கடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது நிலைமை மோசமாகியுள்ளது.
Hamburg லுள்ள சிறப்பு நிறுவனம் ஒன்றில் பாம்புக்கடி மருந்துக்கு ஆர்டர் செய்த மருத்துவர்கள், பொலிஸாருக்கும் தகவலளித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் பண்ணைக்குச் சென்ற பொலிஸார், அங்கு ஏராளமான பாம்புகள் வளர்க்கப்பட்டு வருவதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அவற்றில் 110க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
நிபுணர்கள் உதவியுடன் பாம்புகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் பல விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுகின்றது.