ஐரோப்பாவிற்கு விநியோகம் செய்வதை ரஷ்யா தடை செய்துள்ளது.
ஜேர்மன் நுகர்வோர் வரும் மாதங்களில் எரிவாயு விலைகள் மூன்று மடங்கு உயரக்கூடும் என ஒரு மூத்த எரிசக்தி அதிகாரி எச்சரித்துள்ளார்.
ரஷ்யா கடந்த வாரம் ஜேர்மனிக்கான Nord Stream 1 குழாய் வழியாக எரிவாயு ஓட்டத்தை 40 சதவீதம் குறைத்தது.
பெடரல் நெட்வொர்க் ஏஜென்சியின் தலைவர், ஜேர்மன் எரிசக்தி அதிகாரி கிளாஸ் முல்லர் (Klaus Müller), ரஷ்யாவின் முடிவு சந்தை விலைகளில் ஆறு மடங்கு உயர்வுக்கு தூண்டியது என தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் குடிமக்கள் அதிகரித்து வரும் செலவுகளுக்கு தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட முல்லர், மேலும் இரட்டிப்பு அல்லது மும்மடங்கு விலையேற்றம் சாத்தியம் என தெரிவித்துள்ளார்.
பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக், ரஷ்ய எரிவாயு விநியோகம் இப்போது இருப்பதைப் போலவே குறைவாக இருந்தால், ஜேர்மனி எரிவாயு பற்றாக்குறையை நோக்கிச் செல்லும் என்று கூறியதை அடுத்து முல்லர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.