சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதன் பின்னர், உலனளவில் கொரோனா தொற்றின் தாக்கம் பாரிய அளவில் பரவியுள்ளது.
மேலும் டெல்டா, ஓமைக்ரான் என கொரோனா வைரஸ் புதிய புதிய திரிபுகளாக மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
பைஸ் நகரில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
‘ஜூரோ கோவிட் கொள்கை’யில் சீனா தீவிரமாக உள்ளது.
இதன் காரணமாக பைஸ் நகரில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் யாரும் நகரத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வாகன ஓட்டிகள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக சாலைகளில் சிவப்பு விளக்கு மட்டும் எரியும் விதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.