கொழும்பின் சில பகுதிகளில், இன்று முற்பகல் 10 மணிமுதல் 36 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்புக்கு நீரை விநியோகிக்கும் பிரதான நீர்விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள தீடீர் கசிவு காரணமாக இந்த நீர்விநியோகத்தடை அமுலாக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 01, 07, 09, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு 08 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.