இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் போக்காரோவை சேர்ந்தவர் துலர்சந்த் முண்டா வயது 55 என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற சாலை விபத்து காரணமாக படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி அங்கன்வாடி ஊழியர் ஒருவர் முண்டாவுக்கு கோவிஷீல்ட் முதல் தவணை தடுப்பூசி செலுத்தினார்.
மறுநாள் முண்டா எழுந்து நிற்கவும், வார்த்தைகளை பேசும் திறனையும் பெற்றுள்ளார்.
இதனை மருத்துவர் ஜிதேந்திர குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
முண்டாவின் இந்த அதிசயமான நடவடிக்கை குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட மருத்துவகுழு அமைக்கப்பட்டுள்ளது என மருத்துவர் கூறியுள்ளார்.
