கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சாதாரணமாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகி தீவிர நிலைமையை அடையாவிட்டாலும் கூட , இந்த பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி பொதுமக்கள் அனைவரும் முககவசம்,சமூக இடைவெளி மற்றும் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.