தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று 25 ஆம் திகதி காலை 9 மணியளவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்தேகத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை.
சுமார் 30 – 35 வயது மதிக்கதக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
பெண்ணின் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.