அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பாரிய கன மழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கொடிய விஷமுள்ள எட்டுக்கால் பூச்சிகள் பொதுமக்களின் வீடுகளுக்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கினால் அடித்து வரப்பட்டுள்ள எட்டுக்கால் பூச்சிகள் உலகிலேயே அதிக விஷமுள்ள இனத்தை சேர்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளம் காரணமாக எட்டுக்கால் பூச்சியால் பிளேக் போன்ற நோய் பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு பின் நேற்று தான் சூரிய வெளிச்சம் தென்பட்டுள்ளது.
அந்த சூரிய வெளிச்சம் காரணமாக உடனடியாக விஷத் தன்மை கொண்ட எட்டுக்கால் பூச்சிகள் படையெடுக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த விஷமுள்ள எட்டுக்கால் பூச்சிகள் கடித்து ஏற்கெனவே சிலர் இறந்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.