கனடாவில் பள்ளி வளாகம் அருகே துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை பொலிசார் சுட்டு கொன்றனர்.
செவ்வாய்கிழமை, அமெரிக்காவில் உள்ள ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டொரண்டோ நகரில் உள்ள ஆரம்ப பள்ளியில் இருந்து சுமார் 400 அடி தொலைவில் துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரை பொலிசார் பிடிக்க முயன்ற போது அவன் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினான்.
பொலிசார் பதிலுக்கு சுட்டதில் அவன் உயிரிழந்தான். அப்பகுதியில் இருந்த 5 பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன.