இலங்கையில் மத்துகம, கழுபஹன பிரதேசத்தை சேர்ந்த உதய குமார என்ற 31 வயதான இளைஞன் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் கெலிமோ கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது சிறு பிள்ளைகள் சிலர் நீரில் அடித்து செல்வதனை அவதானித்துள்ளார்.
சிறுவர்களை காப்பாற்றுவதற்காக பெண்கள் சிலர் கடலில் இறங்கியுள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞனும் நீரில் இறங்கி பெண்கள் மற்றும் சிறுவர்களை காப்பாற்ற உதவியுள்ளார்.
இதன் போது திடீரென எழுந்த கடல் அலையில் சிக்கிய அவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
எனினும் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.