இலங்கையில் மட்டக்களப்பு – வாழைச்சேனை கிரான் சின்னவெம்பு கடல் பகுதியில் இரண்டு சிறுவர்கள் நீராடச் சென்றுள்ள நிலையில் மாயமாகியுள்ளனர்
இரண்டு சிறுவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்று 14 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 15 மற்றும் 16 வயதான இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல்போயுள்ளனர்.
மூன்று சிறார்கள் குறித்த கடல் பகுதியில் நீராடியபோது, அவர்கள் மூவரும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவமறிந்த பகுதிவாழ் மக்கள், ஒரு சிறுவனை மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சிறார்களைத் தேடும் பணிகளில், காவல்துறையினரும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.