ஜெர்மன் தலைநகர் பெர்லினில், பணக்கார மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டம் நடைப்பெற்றது.
அதில், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் (António Guterres) தெரிவிக்கையில்,
பருவநிலை மாற்றம், கொரோனா ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டினி பிரச்சினையை உருவாக்கியுள்ளன.
அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
உக்ரைன் போர், அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது.
ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளில் உரம், எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் தடுமாறுகின்றனர்.
அந்த நாடுகளில் அறுவடை பாதிக்கப்படும்.
அதனால், இந்த ஆண்டு பல நாடுகளில் பஞ்சம் அறிவிக்கப்படும் என்ற அபாயம் உள்ளது.
அடுத்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமடையும் வாய்ப்பு உள்ளது.
உணவு கிடைக்காத பிரச்சினை, உலக அளவில் உணவு தட்டுப்பாடாக மாறும்.
அது உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும். எந்த நாடும் அதன் சமூக, பொருளாதார பின்விளைவுகளில் இருந்து தப்ப முடியாது.
எனவே, இதை சமாளிக்க ஐ.நா. அதிகாரிகள் ஒரு சமாதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.