உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது.
மக்கள் பதுங்கு குழிகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இரு நாட்டினதும் உயிர் பலிகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
இந்நிலையில் உலக நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸ், போர் என்பது மனிதநேயத்தின் தோல்வி என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, நேற்று வத்திகானில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு நேரில் சென்ற போப் பிரான்ஸிஸ், “ உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக உக்ரேனிய கத்தோலிக்க தலைவர்களுக்கு உறுதி அளித்தார்.
போப் பிரான்ஸிஸ் நேரடியாக ஒருநாட்டின் தூதரகத்திற்கே செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது..