இலங்கை முழுவதும் இன்று மின்விநியோக தடையை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இதன்படி, பிற்பகல் 2:30 முதல் மாலை 6:30 வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 45 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.