இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை முதல் மின்சார விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிக மின்சார கோரிக்கை இன்மையால் நேற்றைய தினம் மின்சார தடை ஏற்படவில்லை என கட்டுப்பாட்டாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் பல பிரதேசங்களில் மின்சார விநியோக தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை சீனாவிடம் ஒப்படைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.