பேஸ்புக் மூலம் பெண் ஒருவருடன் நட்பாகப் பழகி பண மோசடி செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளி நாட்டிலிருந்து டொலர் பொதி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்து சந்தேக நபரால் குறித்த பெண்ணிடம் இருந்து 129,000 ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயதான சந்தேக நபர் நேற்று நுகேகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கணினி குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப் பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸை பிரதேசத்தில் ஆடைத் தொழிலில் தான் ஈடுபட்டு வருவதாக சந்தேக நபர் தன்னை அடையாளப் படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.