எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதியில் பல சிக்கல்கள் ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருளை வாங்குவதற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 420 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.