இலங்கையில் இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில மேலும் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப் படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனன்கம்மான இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருகோணமலை பொலிஸ் பிரிவை சேர்ந்த சுபத்ரா லங்கா மாவத்தை பிரதேசமும் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்தார்.