ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் மீள் அறிவிப்பு வரை அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலும் நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.