இரண்டு தொடருந்துகள் மோதி விபத்து 32 பேர் பலி…!
மத்திய எகிப்தில் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
அதில் 32 பேர் பலியாகினர் மேலும் 165 பேர் காயமடைந்துள்ளனர்.
சொஹாக் மாகாணத்தின் தஹ்டா நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களால், தொடருந்தின் அவசர தடுப்புக் கட்டை இயக்கப்பட்டமையால் குறித்த தொடருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த தொடருந்துக்கு பின்னால் பயணித்த தொடருந்து, அந்தத் தொடருந்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்துக்கு பொறுப்பானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டாஹ் அல்-சிசி (Abdul Fattah al-Sisi) தெரிவித்துள்ளார்.