ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
அதன்படி இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவின் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் பதவி வெற்றிடமாக உள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மட்டுமே இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்ப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.