இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை விஜயம் செய்த அவர், வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்பின்னர், இந்திய உதவியில் அமைக்கப்படும் யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்திற்குச் சென்று கட்டுமாணப் பணிகளைப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குச் சென்று நூலகத்தைப் பார்வையிட்டதுடன் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத் தூதுவர் பாலச்சந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




