இந்தியாவுக்கு பயணிக்க வேண்டாம்…. பயணிகளை எச்சரிக்கும் அமெரிக்கா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான பரவி வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்க குடிமக்கள் யாரும் இந்தியாவிற்கு பயணிக்கத் திட்டமிட்டிருந்தால் அதை மறுபரிசீலனை செய்யும்படி அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள பயண அறிவிறுத்தலில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு பயணிப்பதை தவிர்க்கும்படி அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவுடன் சேர்த்து குற்றங்களும், தீவிரவாதமும் அதிகரித்துள்ளதால் கவனத்துடன் இருக்கும்படி அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மூ காஷ்மீரில் தீவிரவாதம் அதிகமாக இருப்பதால் அங்கு யாரும் பயணிக்க வேண்டாம்.
அதுபோல சுற்றுலாத் தலங்களிலும் பாலியல் வன்புணர்வு போன்ற கொடூர குற்றங்கள் நடந்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.