இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பான செயல்முறைகள் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் குளிர்காலம் முடிந்து வைரஸ் பரவல் குறைவடைய கூடிய சாத்திம் உள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட் இலவச, அறிகுறி மற்றும் அறிகுறியற்ற பரிசோதனையை நிறுத்தப்படும்.
கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான சட்டத் தேவை வியாழக்கிழமை முதல் நீக்கப்படும்.
இங்கிலாந்து, அரசு விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து தனிப்பட்ட பொறுப்புக்கு நகரும்.
எதிர்கால கொரோனா மாறுபாடுகளை சமாளிக்க தற்செயல் நடவடிக்கைகள் பராமரிக்கப்படும்.
மற்றவர்களிடம் கரிசனையுடன் இருக்குமாறு மக்களை கட்டாயப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
நடைமுறை ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வை கொண்டிருந்தல் வேண்டும்.
மேலும் அன்புக்குரியவர்களை கொரோனா தொற்று ஏற்படுவதில் இருந்து காக்க வேண்டும்.