பிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்ற பெண் ஒருவர், தோல் முழுவதும் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக வலியில் அவதியுற்று வருகிறார்.
ஸ்காட்லாந்தில் வாழும் Leigh King (41), இரண்டு வாரங்களுக்கு முன் ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
சிறிது நேரத்தில் அவரது முகம், கைகள், மார்பு, முதுகு, கால்கள் என ஒரு இடம் விடாமல் தோல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் உருவாகின.
Leighயின் மகன் ஆட்டிஸக் குறைபாடு கொண்டவன் என்பதால்தான் Leighக்கு தடுப்பூசியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
Leighஇன் மகனான Aidan (13), அம்மாவின் தோற்றத்தைப் பார்த்து பயந்துபோய் அவருக்கு அருகிலேயே வரமாட்டேன் என கூறுகின்றான்.
Leigh இப்போது அவனை கவனித்துக்கொள்ள வேறு ஆள் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 100இல் ஒருவருக்கு இப்படி தோலில் பிரச்சினைகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் பிரச்சினையிலிருந்து விடுபட மருத்துவமனைகள் பல ஏறியும் பலனில்லை என்பதால் Leigh தோல் நோய் சிகிச்சை நிபுணர் ஒருவரை சந்திக்க இருக்கிறார்.