அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்த வார இறுதியில் இதுவரை சிகாகோ நகரம் முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தெற்கு அல்பானியின் 0-100 பிளாக்கில் சனிக்கிழமை அதிகாலை 12:19 மணியளவில் 37 வயதான பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பெண் ஒரு வாகனத்தில் பயணித்தபோது, அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அவரது தலை மற்றும் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகி, ஆபத்தான நிலையில் ஸ்ட்ரோஜர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.